×

மருத்துவர் ஜீவானந்தம் நினைவேந்தல் நிகழ்ச்சி

ஈரோடு,டிச.13: தமிழக பசுமை இயக்க நிறுவனரும், எழுத்தாளரும்,சுற்றுச்சூழல் ஆர்வலரும், மருத்துவருமான ஈரோட்டை சேர்ந்த ஜீவானந்தத்தின் நினைவேந்தல் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், கலைமகள் பள்ளி ரோட்டில் உள்ள ஜீவானந்தம் கட்டிடம், அவரது உருவச்சிலை, கூடல் அரங்கம், மருத்துவ ஆலோசனை மையம் திறப்பு விழா நிகழ்ச்சி நடந்தது. இதில், சிறப்பு அழைப்பாளராக சமூக ஆர்வலர் கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன், சுற்றுச்சூழல் ஆர்வலர் மேதா பட்கர், எழுத்தாளர் ஜெயமோகன், ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு, பழங்குடி இன மக்கள் நிர்வாகி வி.பி.குணசேகரன், தி.மு.க., துணை பொதுசெயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் ஆகியோர் கலந்து கொண்டு திறந்து வைத்தனர்.

தொடர்ந்து நடந்த நினைவேந்தல் நிகழ்ச்சியில் ஜீவானந்தத்தின் சிறப்புகள், அவரது கொள்கைகள் குறித்து எடுத்துக்கூறினர். இதைத்தொடர்ந்து, பசுமை விருதுகள் பத்திரிக்கையாளர் சமஸ், பாடகர் கிருஷ்ணா, விஷ்ணுபிரியா ஆகியோருக்கு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியின் முடிவில் ஜீவானந்தத்தின் சகோதரி ஜெயபாரதி நன்றி கூறினார்.

Tags :
× RELATED மின்மோட்டார் வைக்கும் இரும்பு ஸ்டாண்டு திருடியவர் கைது